Sunday, September 25, 2016

சிலேடை- அரியும் அரனும்

http://chandhamanantham.blogspot.ca/2016/09/blog-post_25.html
                                                                 அரியும் அரனும்


                                         

           

                                தேரில்நல் ஆசான் திருவோடு காப்பார்தம்
                                
                                பேரிலே கண்ணர் பெரும்பசியர் வான்புரக்க

                                ஆழி யுறைவிடம் கொண்டிடுவார் அன்புடையோர்

                                வாழத்தாம் தூதாய் வழிநடப்பார் மாட்டார்

                                அரிவைஉடல் வைத்திடுவார் ஆடவல்லார் ஆமிங்(கு)  

                                அரியும் அரனென்று அறி.

அரி: அருச்சுனனுக்குத் தேரில் ஆசானாய்ப் போதித்தவர்இலக்குமியோடு உலகைக் காப்பவர்கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்நல்ல பச்சைநிற (பசிய) மேனி உடையவர்விண்ணுலகை ஆளப் பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவர்பாண்டவர்களுக்காகத் தூது சென்றவர்மாடு உடையவர் (இடையர்)சீதேவியை மார்பில் வைப்பவர்; (கோபியருடன்/ அல்லதுபாம்புத்தலைமேல்) ஆட வல்லவர்

அரன்: ஆராய்ந்தோமேயானால் (=தேரில்)சனகாதி முனிவர்களுக்குத் தட்சிணாமூர்த்தி குருவாய்ப் போதித்தவர்பிச்சையெடுக்க ஓடேந்துபவர்முக்கண்ணன் என்பதைத் தமது பேர்களில் ஒன்றாய்க் கொண்டவர்; (இரந்துண்டு வாழ்வதால்) பெரிய பசியோடு இருப்பவர்தேவர்களைக் காப்பதற்காகப் பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சை உட்கொண்டவர்தம் அன்பனான சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையிடம் தூது சென்றவர்நந்தியை வாகனமாகக் கொண்டவர்உமையை இடப்பாகத்தில் வைப்பவர்அம்பலத்தில் நடம்ஆட வல்லவர்.

..அனந்த்


2 comments:

Unknown said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை
Simply great

ananth said...

மிக்க நன்றி.
அனந்த்