Saturday, May 12, 2018

சித்திரச் செய்யுள்- பகுதி 1

சித்திரச் செய்யுள்

வே.. அனந்தநாராயணன் (அனந்த்)

(அடைப்புக்குறிக்குள் காணும் எண்கள் இறுதியில் தந்துள்ள துணைநூல் பட்டியலைச் சார்ந்தவை.)

யாப்பிலக்கணம் வழுவாமல் இயற்றப்பட்ட கவிதை ஒன்றின் எழுத்துக்கள் ஒரு ஓவிய அமைப்புக்குள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அடக்கப்படுவதைச் சித்திரச் செய்யுள் அல்லது சித்திரக் கவி என்று அழைப்பர் (1-3). ஆசுமதுரம்சித்திரம்வித்தாரம் என்ற நால்வகையான மரபுக் கவிதை வகைகளில் ஒன்றான சித்திரக் கவிதைகள் சமஸ்கிருதத்திலும்தமிழிலும்பிற இந்திய மொழிகளிலும் படைக்கப்பட்டுள்ளன.  பாம்பு, தேர், சதுரங்கம், மாலை போன்ற பல்வேறு ஓவிய வடிவங்களில் அமைக்கப்படும் சித்திரக் கவிதைகளை பழங்காலத் தமிழ் இலக்கியத்திலும் தற்காலத்திலும்  காணலாம்.  மரபுக் கவிதைக்கான இலக்கணக் கட்டுப்பாட்டையும் அதன் மேலாகக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைப்பதற்கான விதிகளின் கட்டுப்பாட்டையும் பின்பற்றி அமைக்க வேண்டிய காரணத்தால் சித்திரச் செய்யுள்களை இயற்றுவது கவிஞரின் யாப்புத் திறனுக்குச் சவால் விடும் ஒரு முயற்சியாகும்

அண்மையில், ’சந்தவசந்தம்’  என்னும் மரபிலக்கிய இணையக் குழு நடத்திய சித்திரக் கவியரங்கத்தில் பல கவிஞர்கள் பங்கேற்றுப் பலவகையான சித்திரச் செய்யுள்களை வழங்கினர் (https://mail.google.com/mail/u/0/#search/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/161b1a30ed2d1928.) 
அந்தச் சித்திரக் கவியரங்கத்தில் நான் இட்ட கவிதைகளைக் கீழே தந்துள்ளேன்:

சந்தவசந்தம்: சித்திரக்கவியரங்கம். 
தலைவர்: கவிஞர் அஷோக் சுப்பிரமணியம்

தலைமை வாழ்த்து

சோகம் தமக்கில்லார் துரத்திடுவார் பிறர்கவலை
யாகம் எனும்வண்ணம் இவ் வரங்கை நடத்திடுவார்
நாகம் முதலாக நானா வகைப்படம்மேல்
மோகம் கொளச்செய்தல் மூச்(சு)இவர்க்(கு) என்வணக்கம்.

இவர்வழி சென்று
கவலை களைவோம்! (அட்டநாகம்)

அட்டநாகம்: எட்டு பாம்புகள் பின்னிப் பிணைந்த வடிவம் கொண்ட சித்திரத்தில், மேலுள்ள கவிதை ஒவ்வொரு பாம்பின் வாயில் தொடங்கி, வாலில் முடியுமாறு அமைப்பது. இந்த அமைப்பில்,  பாம்புகளின் உடல் மடங்கித் திரும்பும்போதும், பிற பாம்பொன்றின் உடலைச் சந்திக்கும் போதும் உள்ள அறைகளின் எழுத்துக்கள் பொதுவாக இருக்கும்படி செய்ய வேண்டும். 


அவை வணக்கம்:


வானத்தை வில்லாய் வளைக்கும் திறனுடையார்

கானம்சேர் சந்தக் கவிபடைப்பார் – ஊன(ம்)மிகு

மென்றன் கவிதையையும் ஏற்றிடுவார் சித்ரகவி

மன்றத்தோர்க்(கு) இங்கெனது வாழ்த்து.



சித்திர கவிதை- 1:  இரட்டை நாகபந்தம்


குறிப்பு: இரட்டைநாகபந்த இலக்கணம்http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=5&pno=210

இரண்டு பாம்புகள் தம்முள் இணைவனவாக உபதேச முறையான் பாம்பு 

உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வரையப்பட்டு, அவற்றுள் இரண்டு 

கவி எழுதப்பட்டுச் சந்திகளினின்ற அறைகளில் பொதுவாக 

எழுத்துகளமைய ஒரே எண்ணிக்கை கொண்ட எழுத்துக்களாலான 

கவிகள் சித்திரத்தில் பொருத்தப்படுவது இரட்டை நாகபந்தமாம்.”


வாலுள் இருமூன்றும் தலையில் இரண்டெழுத்தும்

மூலைகள் நான்கும் வயிறிரண்டும் ஐவைந்தாய்

நாலெட்டு நாலைந்தே ழாகி நடைபெறுமே

சேலிட்ட கண்ணரவின் சீர்.

ஒவ்வொரு பாம்பும் தமக்குள் ஆறு இடங்களில் மடங்குமாறும் எதிர்ப்பாம்புடன்பன்னிரண்டு 
 இடங்களில் வெட்டும் வண்ணமும் அமைக்கப்படும் இந்தப் பந்த அமைப்பில்,ஒவ்வொரு 
 வெண்பாவும் 57 எழுத்துகள் கொண்டு, மொத்தம் 114 எழுத்துகள் அமையும்.


நாகம்-1  நேரிசை வெண்பா


தஞ்ச மெனவுன தண்பாதஞ் சேர்கையி  

லஞ்சா யெனநீகை தான்கொடுப்பாய் - குஞ்சர

பாலனே மெய்மறை போற்றிடு மப்புனித

சீலனே `யென்குறை தீர்.


பதம் பிரித்து:

தஞ்சம் எனஉன தண்பாதம்  சேர்கையில்  

அஞ்சாய்  எனநீகை தான்கொடுப்பாய் - குஞ்சர

பாலனே மெய்மறை* போற்றிடும் அப்புனித

சீலனே என்குறை தீர்.

(*மெய்ம்மறை என்பது எழுத்துக் கட்டுப்பாடு கருதி, மெல்லின ஒற்றின்றி வந்தது.)   


நாகம்-2 இன்னிசை வெண்பா 


நெஞ்ச மலரவினி தேகொஞ் சமுமினி

யஞ்ச லெனவேநீ  காலடி பால்வீழி        

னன்புலவு வால வமலநி ரந்தரியே

ரஞ்சனிமா தாவெனக்குச் சொல்.


பதம் பிரித்து:

நெஞ்சம் அலரஇனி தேகொஞ் சமும்இனி

அஞ்சல் எனவேநீ  காலடி பால்வீழின்        

அன்புலவு வால அமல நிரந்தரியே

ரஞ்சனி மாதா எனக்குச் சொல்.


வெண்பா 1: யானை வடிவமுள்ள பாலனே! மெய்யான வேதங்கள் 

போற்றும் தூயவனே! நான் அடைக்கலமாகத் (தாபத்தைத் தணிக்கும்) 

குளுமை பொருந்திய உனது அடியைச் சாரும்போது, எனக்கு நீ அஞ்சற்க 

என உனது கையால் (அபய வரதம்) அளித்திட வேண்டுகிறேன்.   

வெண்பா 2:   அன்புள்ளம் கொண்ட 

வாலையே!, களங்கமற்றவளேநிலைத்திருப்பவளேமனத்தை 

மகிழ்விப்பவளே! கலைவாணித் தாயேநான் உனது காலடியில் 

வீழுங்கால்என் உள்ளம் மலரும் வண்ணம்நீ இனிமையோடு இனிமேல் 

சிறிதும் அஞ்சற்க’ என்று எனக்குச் சொல்வாயாக.



 சித்திர கவிதை- 2:  கூடசதுர்த்தம் [நான்காமடி மறைந்திருக்கும் ஓவியக்கவி]


(நாலடியால் ஆன ஒரு செய்யுளின் முதல் மூன்று அடிகளை மூன்று வரிகளில்,

மேலிருந்து  கீழிறங்கியும், கீழிருந்து மேலேறுவதுமாக எழுதி, நான்காவது 

அடி இவ்வாறு அமைத்த மூன்று வரிகளுக்குள் மறைந்து நிற்பதாக

அமைக்கப்படுவது  கூட சதுர்த்தம் எனப்படும்.)


கவியா லுலகைக் காத்து

மதியா லேஅவி செய்துய்யச்

சிறியவ னுள(ம்)மேவி

விலகாம லேசெய் சிவமே  


(அவி = யாகத் தீயில் இடும் படையல்)
                                                       

 

கை

க் 

 தி

 யா

 ய்

து

றி


 வி
 வி

 

 கா

 

 லே

செ

ய் 

சி


 மே
 யா

 லு

 த்

 து

 

 வி


 ச்

னு

 


சித்திர கவிதை- 3      தேர் அமைப்பு.  எழுகூற்றிருக்கை
எழுகூற்றிருக்கை என்பது தொன்னூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்று. தண்டியலங்காரம் (1), மாறனலங்காரம் (2), யாப்பருங்கல விருத்தியுரை (3), நவநீதப் பாட்டியல் (4) ஆகிய நூல்கள் தந்திருக்கும் இலக்கணப்படி, ஒன்றுமுதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏழு கூறுகளை இடங்கள் ஆகக் கொண்டு, படிப்படியாக உயர்ந்தும் பின்னர் குறைந்தும் வரும் எண்ணலங்காரம் அமையப் பெற்ற ஆசிரியப்பா வகைப் பாடலைக் குறிக்கும். (கூற்றிருக்கைச் செய்யுள்கள் பற்றிய எனது கட்டுரையை  http://vsa-
writes.blogspot.ca/2018/05/blog-post_7.html -ல் காணலாம்.)

சக்கரங்களுக்கான மாலைமாற்றுச் செய்யுள்கள்:  இடப்பக்கம்:  சிவனேவசி”  வலப்பக்கம்: ”மோனகானமோ”     (மேலும் தெளிவான படத்தைப் பின்னர் இடுகிறேன்.)  
                                         திருவண்ணாமலையான்  திருவெழுகூற்றிருக்கை
                                                                                    திருச்சிற்றம்பலம்
                                                 ஓரிமைப் போதுமோ ரோய்விலா தையவுன்
                                                இருதாள் பற்றி யொருமுக நோக்குடன்
                                                ஒன்றியுள் ளிருத்தி மும்மல மொழித்திலன்
                                                இருவினை விரைவினி லிறுத்திட விழைந்திலன்
                                                இம்மையில்  மருந்தொன் றீங்குள தெனயான்
                                                ஓர்ந்துநற் குழுசார்ந் திருந்திலன் முன்னி
                                                நால்வகை  யறம்புரி  ஆன்றநல் லோரை
                                                மும்முறை  வலம்வந் திருதாள் முடியணிந்(து)
                                                ஒருதவம் செய்திலன்

                                                ஒருதர மோதில னிரும்புள முருகிட
                                                மூவா தினிக்கும் நால்வரின் திருமுறை
                                                ஐம்புல னடக்கில னாற்றிசை யலைந்துடல்
                                                மூப்பினை யடைந்து மிருப்பதைப் பகிர்ந்திங்(கு)
                                                ஒருவர்க் கீந்திலன்
                                                ஒருபாற் கனிவாய் உமையவ ளிருத்தி
                                                முக்கட் சுடராய் நான்மறை முடிபாய்
                                                ஐந்தொழில் புரிந்தனை அடியவர் துயரறு
                                                ஐங்கரன் தனது நால்வாய் அழகும்
                                                மூவிரு முகத்தோன் ஒருதனி யொட்பமும்

                                                ஒருங்கே கண்டுமற் றிருவர்க் கொண்ணா
                                                வின்பம் நுகர்ந்தனை
                                                முப்புர மெரித்து நாற்றிசை அஞ்ச
                                                அறுகென வெழுந்துல கதிர்ந்திட நடன
                                                மாடினை ஐயநல் லாறுத லளிக்கும்
                                                ஐந்தெழுத் தோதி நாற்பயன் எய்தியுன்
                                                முன்னிலைக் காட்சி பெறவிரும்பே ரருள்
                                                ஒன்றே துணையென யுணர்ந்தனன் இனியே
                                                மறுபிறப் பில்லாப் பரகதி யெவரும்
                                                பெறுநற் றலமெனப் பெரியோர் புகலும்
                                                அருணைப் பதிவாழ் ஆரழற் சுடரே
                                                கருணை புரிந்தெனைக் காப்பதுன் கடனே
                                                                திருச்சிற்றம்பலம்
*மும்மலம்: ஆன்ம, கன்ம, மாயா மலங்கள்;  இருவினை: நல்வினை, தீவினை; நால்வகையறம்: நான்குவகையான ஆசிரமங்கள்; முன்னிலைக் காட்சி:  இறைவனை அணிந்துறக் காணல்.


குறிப்பு:  இப்பாடலில் காணும் எண்ணமைப்பும் யாப்பமைதியும்  அருணகிரியார், திருஞான சம்பந்தர் ஆகியோரின் திருவெழுகூற்றிருக்கைகளைப் பின்பற்றியது. அதன்படி, ஒரு தேர்/கோபுர வடிவில்: 1, 1 2 1, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321 என்று எண்குறிப்புக் கொண்ட சொற்கள் அமைந்துள்ளன.

பொருள் விளக்கம்
ஐயனே! பெருந்தவத்தினர் செய்வதுபோல உனது திருவடிகளை ஒருகணமும் விடாது பற்றிஉட்புறம் திருப்பிய நோக்குடன் உன்னை என் நெஞ்சில் நிறுத்திஉன்னோடு ஒன்றிய நிலையெய்தி என் மும்மலங்களை அறுத்தெரிய யான் வல்லேனல்லன். அவ்வண்ணம் செய்து என்வினைகளைக் களையும் ஆவலுங்கூடக் கொண்டிலேன். நல்லோரின் கூட்டத்தைச் சேரல் எனது தீவினைப்பயன் தீர மருந்தாகுமென உணர்ந்து அவர்களுள் ஒருவனாகிலேன். நல்லறம் செய்யும் அன்னாரைப் பணிந்து அவருக்குச் சேவைசெய்தல் என்னுந் தவச் செயலையும் ஆற்றிலேன். இவையெல்லாம் செய்யாதொழியினும்சமயக் குரவர் நால்வர் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைப் பாடல்களை ஒருமுறையேனும் ஓதிஇரும்பெனக் கடிய என் மனத்தை உருகச் செய்திலேன். புலனடக்கங்கொண்ட வாழ்வைப் பற்றிலேன். மாறாகக்கண்டவாறு திரிந்து சேர்த்த செல்வத்தை முதியகாலத்திலேனும் பிறர்க்கு ஈயும் பாங்கில்லாதவ னாகினேன். (இந்நிலையில் யானிருக்க:)

உமையை ஒருபுறமிருத்தியவனாய்முக்கண்ணுடையோனாய்மறையின் பொருளாய் விளங்கிப் படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளல் என்னும் ஐவகைத் தொழில் புரியும் பரமனே! பணிவோரின் இடைஞ்சல் அறுக்கும் ஐந்து கரமும் ஆனைமுகமுங் கொண்ட மூத்த புதல்வன் விநாயகப் பெருமானின் அழகையும்,  இளையவன் ஆறுமுகப் பெருமானின் ஒளிரும் எழிலையும் ஒருசேரக் கண்டு நீ மகிழ்வாய். அவ்வண்ணம் இரு அழகிய குழந்தைகளைப் பெற்று நீ அடையுமின்பம் மூவரில் மற்றிருவரான பிரமனுக்கும் திருமாலுக்கும் கிட்டாததொன்று.  (உலக வழக்கிலில்லாத புற உருவங்களைக் கொண்ட தன்  இருமைந்தரின்முறையேஓங்கார வடிவமும் பிரமச்சொரூபமுமான உண்மைத் தத்துவங்களை உணர்ந்து மகிழும் ஆற்றலும் பேறும் சிவபெருமானுக்கே உண்டெனக் கூறியவாறு). ஐய! நீ திரிபுரங்களை எரித்தவன்எத்திசையில் உள்ளோரும் அஞ்சுமாறு அரிமாவென எழுந்து உலகமுழுதும் அதிரும் வண்ணம் நடமாடுபவன். மேலே கூறியவாறு இழிநிலையிலுள்ள அடியேன் மனவமைதியளிக்கும் உன் பஞ்சாக்கர மந்திரமோதிநால்வகைப் பயனுமெய்தி உன்னை என்னுள்ளே கண்டு உய்யவேண்டுமெனின் உனது பெரும்பேரருளை வேண்டித் துணையாகக் கொள்ளல் ஒன்றே வழியாகும் என உணர்ந்திட்டேன். பிறப்பிறப்பில்லா நிலையை ஈனருமடையும் தலமெனப் பெரியோர் கூறும் திருவண்ணாமலையில் சோதி வடிவாய்த் திகழும் சிவபெருமானே! உன்னருளைக் கீழோனான எனக்கும் தந்து என்னைக் காப்பது உன் கடனாகும்.  

சித்திர கவிதை- 4: பருவத மார்க்க பந்தம்  
முன்னுரை: பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் உபதேசங்களின் தொகுப்பாக அவரால் இயற்றப் பட்ட கவிதைப் படைப்புகளில், கலிவெண்பா யாப்பில் அமைக்கப்பெற்ற உள்ளது நாற்பது தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. அதிலுள்ள நாற்பது வெண்பாக்களில் முதல் வெண்பாவாகவும் அதன் பின் வரும் வெண்பாக்களின் உட்கருத்தாகவும் அமைந்த பாடல்  கீழே தரப்பட்டுள்ளது: 

உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.

பொருள் விளக்கம்: https://anmikam4dumbme.blogspot.ca/2015/02/2_28.html -லில் இருந்து:
ஆதி அந்தமில்லாது எப்போதும் இருக்கிற ஞான ஸ்வரூபம் ஒன்றே உண்மை. அது அல்லாமல் வேறு ஒரு உண்மையான வஸ்து உள்ளதோ? இல்லை. அந்த ஞான ஸ்வரூப சத்திய வஸ்துவானது, மனம் சகல நினைப்புக்களும் நீங்கி தன்னுள்ளே ஒடுங்கும் போது ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது. ஆகவே மனம் எப்படி அந்த சத்திய வஸ்துவை நினைக்க முடியும்? ஞான மயமான ஹ்ருதயத்தில் அந்த ஞான ஸ்வரூபம் உள்ளது போலவே மனம் அதன் உள்ளே மறப்போ நினைப்போ இல்லாது அம்மயமாகவே ஒடுங்கிக்கிடப்பதே அதை நினைத்தல் ஆகும் என அறிவாயாக.

நினைத்தல், உட்பக்கம், இருப்பு என்ற மூவகைப் பொருள் கொண்ட உள் எனும் சொல் மேற்கண்ட பாடலில், ’உள்ள என்னும் சொல்லாட்சியாக 14 முறை பயில்கிறது. பாடலில் ஒவ்வொரு முறையும் இச்சொல் இந்த மூன்று விதமான பொருள்களில் ஒன்றையோ ஒன்றிற்கும் மேலானவற்றையோ கொண்டு,மெய்ப்பொருளின் தன்மையை விரித்துரைக்கும். நம்மை நாமே உணர்வதற்கான வழியைச் சொல்லும் உள்ளது நாற்பது நூலின் தலையானதான இந்த வெண்பாவில் ஒரே சொல் (உள்ள) பன்முறை பயில்வதை ஆன்ம விசாரத்திற்கான வழியின் படிக்கட்டுகளாக உருவகப் படுத்தும் ஒரு சித்திர அமைப்பாக்க முயன்று விளைந்த வடிவத்தைக் கீழே காணலாம்:
. (இதனை நிரோட்டகம், வல்லினப் பாட்டு, அக்கரச் சுதகம், அக்கர வருத்தனை,கூற்றிருக்கை போன்ற சொல்லமைப்பின் அடிப்படையில் அமையும் மிறைக்கவிகளைப் போலக் கருதலாமெனத் தோன்றியது- மாறனலங்காரம்,பக். 466-476.) 

இதையொட்டி, எனது ஆய்வுத் தளமாகிய உயிர்வேதியியலின் பெரும்பகுதியான புரதங்களின் கட்டுமானத்தில் (Protein Structure) காணப்படும் ஒரு முக்கிய அமைப்பான ”லூஸீன் ஜிப்பர்” (Leucine Zipper) என்னும் அமைப்பு, மேலே தந்த ஸ்ரீரமணரின் கவிதையில் பொதிந்திருக்கிறது என்ற கண்ணோட்டம் எனக்குள் எழுந்தது. உயிரினங்களின் அடிப்படையான மரபணுக்களில் உள்ள டீ.என்.ஏ (DNA)-யில் அடங்கியுள்ள செய்தியை வெளிக்கொணரல் என்னும் இன்றியமையாத தொழிலை ஆற்றும் புரதங்களிடையே லூஸீன் ஜிப்பர் என்னும் கட்டுமானம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் சொல் அமைப்பை ஒரு ” சுருள் இணை” (a pair of interacting helices in a zipper arrangement) வடிவச் சித்திர கவியாகக் கருதலாம்.  நமக்குள் எப்போதும் ஒளிரும் ஆன்ம உணர்வை வெளிக்கொணரும் வகையாக அமைந்துள்ள ரமணரின் இந்த வெண்பாவில் லூஸீன் ஜிப்பர் அமைப்பு போன்ற சொல்லமைப்பு இருப்பதைக் கண்டேன். (இதுபோல, வேறெந்தக் கவிதையிலும் கண்டதாக என் சிற்றறிவிற்குத் தென்படவில்லை.) அதன் விளைவாக இந்தச் சொல்லமைப்பை ஒரு சித்திர/மிறைக் கவியின் கட்டுமானமாகக் கருதலாம் எனவும் தோன்றியது.  கீழே தந்துள்ள படத்தில், திருவண்ணாமலையின் உச்சியில் காணும் அருணாசலப் பேரொளியை, மெய்யறிவை அடையும் வழியாக  லூஸீன் ஜிப்பர் வடிவை அமைத்து அதில்  ஸ்ரீரமணரின் வெண்பாவில் பலமுறை காணும் ’உள்ள’ என்னும் சொல்லைப் படிக்கட்டுகளாக  அமைத்துள்ளேன். (இந்தப் புதுவகையான சித்திரச் செய்யுள் வடிவத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை "உள்ளபடி” தெரிவிக்க வேண்டுகிறேன்.) 
     

மேலே காணும் திருவண்ணாமலையின் படத்தின் உள்ளே காட்டப்பட்டிருக்கும் படிபோன்ற அமைப்பை, கீழுள்ள படத்தில் தெளிவாகக் காட்டியுள்ளேன்.


மேலே உள்ள படத்தில் காட்டியுள்ள படிக்கட்டு வழி போன்ற அமைப்பைக் கீழே தந்துள்ள புரதங்களில் காணப்படும் ”லூஸீன் ஜிப்பர்” (Leucine Zipper)   அமைப்போடு ஒப்பிடலாம்.  இருபக்கத்திலும் உள்ள சுருள்களுக்கு இடையே படிகள் போன்று  காண்பவை புரதங்களில் உள்ள அமைனோ ஆசிட் (amino acid)  என்னும் மூலக்கூறுகளின் பகுதிகள் :


லூஸீன் ஜிப்பர்” அமைப்புப் பற்றிய மேலதிகத் தகவல்களை இணையத்தில் காணலாம். காட்டாக:https://en.wikipedia.org/wiki/Leucine_zipper ; http://csmbio.csm.jmu.edu/biology/courses/bio220/zipper.html

மேலே தந்துள்ள சித்திரச் செய்யுள்களின் தொடர்ச்சியாக, “சித்திரச் செய்யுள்கள். பகுதி-2: ”உயிரூட்டும் சித்திரச் செய்யுள்கள்” என்னும் தலைப்பில் அடுத்துவரும் கட்டுரையில் காணவும். 

துணை நூல்கள் சில:
1. வே.இராமாதவன், ‘சித்திரக் கவிகள்’ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை (1983).
3.  ’சித்திரக் கவித்திரட்டு’, ஞா. பாலசந்திரன், ஞானம் வெளியீடு (2016)

No comments: