<> ரங்கநாதன் தெரு -
ஆதிசேஷன் சிலேடை வெண்பா <>
நீண்டு கிடக்கும், நிதமும்
இலக்குமியைப்
பூண்டோன்பேர் தாங்கிப்
பணம்பெருக்கும் – வேண்டும்
பொருள்தரும், நீள்பயணம் போவோர்
வழியாய்
இருக்கும் தெருஅனந்த னே.
(பணம் = காசு; பாம்பின் படம்.)
ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.
ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும்
திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்; தன்னைப்
பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.
அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய்
அமையும்.
No comments:
Post a Comment