Tuesday, October 3, 2017

சிலேடை: ரங்கநாதன் தெருவும் ஆதிசேஷனும்

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை வெண்பா <>




     நீண்டு கிடக்கும், நிதமும் இலக்குமியைப்
     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்
     பொருள்தரும், நீள்பயணம் போவோர் வழியாய்
      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.


ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.  

No comments: