குரு பௌர்ணமியை அடுத்து வேதவியாஸ பூஜையும் சாதுர்மாஸ்ய விரதமும் கடைப்பிடிக்கப்படும் வேளையை ஒட்டி:
ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने ।
व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः (मानसोल्लास -30)
ஈச்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே
வ்யோமவத் வ்யாப்த தேஹாய ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே
(- மானஸோல்லாஸம்)
திருச்சிற்றம்பலம்
இறையும், குருவும், ‘நான்’என்றுள்
.. இயங்கும் ஆன்மா இவைமூன்றும்
உருவில் வேறாய்த் தோன்றிடினும்
.. உள்ள ஒன்றின் வெளிப்பாடே
தருவின் அடியில் முனிவர்க்(கு)இத்
.. தத்து வத்தைப் போதிக்கும்
குருவே எங்கும் பரந்துநிற்கும்
.. கோவே! உனக்கு நமஸ்காரம்.
..அனந்த் 9-7-2017
No comments:
Post a Comment