Friday, November 4, 2016

கந்தசஷ்டி: தாமரைத் தாளன்

   <> தாமரைத் தாளன் <>



(சந்தக்குழிப்புதனதனன தனதான னதனன தனதான
                            தனதனன தனதான தனதான")


விடியுமொரு தனிநேர மெழு(ம்)அருண நிறமேவு
...விமலமுக மெனு(ம்)ஆறு கதிர்நாடி

அடியரவர் பலபேரு மணுகியுன துதிபாடி 
...அனுதினமு வரநீயு மவர்காண

கடிபுரவி எனவோடுங் கனகமயி லதன்மேலே
...கையிலமரு(ம்அயிலோடு வருவேளை

வடிவொழுகு பதமான கமலமலர் தனிலேஎன்
...மனமெனுமொ(ர்அறுகாலி படியாதோ?

(வடிவு-அழகு; அறுகாலிவண்டு)

அனந்த் 5-11-2016

No comments: