Wednesday, November 2, 2016

அவனும் நானும்

        <> அவனும் நானும் <>


சின்னதோர் தலையில் ஈசன்
என்னவோ எழுதி மண்ணில்
இன்னவா றிருப்பாய் என்று
முன்னமே விதித்து விட்டான்

வந்தநாள் முதலாய் இங்குச்
சொந்தமாய் நானே செய்ய
எந்தவோர் உரிமை யின்றி
நொந்துநான் இருக்க வைத்தான்

சிந்தையைத் திருப்ப வைக்கும்
பந்தமாய்ப் பலவே றான
சொந்தமும் அளித்தான் நானும்
அந்தகன் போல வாழ்ந்தேன்
            
இன்றுநான் செய்யும் எதுவும்
நன்றெனில் நன்றி சொல்வேன்
அன்றது தீமை ஆயின்
சென்றவன் பால்சொல் வீரே!

அனந்த் 2-11-2016

No comments: