Thursday, September 22, 2016

சிலேடை

<> ரங்கநாதன் தெரு - ஆதிசேஷன் சிலேடை <>


     நீண்டு கிடக்கும் நிதமும் இலக்குமியைப்

     பூண்டோன்பேர் தாங்கிப் பணம்பெருக்கும் – வேண்டும்

     பொருள்தரும் நீள்பயணம் போவோர் வழியாய்

      இருக்கும்  தெருஅனந்த னே.

(பணம் = காசு; பாம்பின் படம்.)

ரங்கநாதன் தெரு: நீளமானது; திருமாலின் பெயர் கொண்டது; விற்பனையாளர்க்குத் தினமும் பணத்தைக் கூட்டும்; எந்தப் பொருளும் அங்குக் கிட்டும்; புகைவண்டி நிலையத்திற்கான வழியாக அமையும்.

ஆதிசேடன்: நீண்ட வடிவம், எப்போதும் திருமாலின் பெயரைத் தன் ஆயிரம் நாவில் தாங்கிப் படத்தை விரித்து நிற்கும்;  தன்னைப் பணிவோர்க்கு வேண்டும் பொருள் ஈயும்.  அடியாரின் இறுதிப் பயணத்திற்கு ஆன நல்வழியாய் அமையும்.  
                                                                                                                                                                                             

2 comments:

Unknown said...

அருமை,திறமை,தமிழுக்குப் பெருமை

ananth said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அனந்த்